திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்பட அதிகாரிகள் திண்டுக்கல்லில் இருக்கும் லாரி பார்சல் நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் நேற்று முன்தினம் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கச்சேரி தெருவில் இருக்கும் லாரி பார்சல் நிறுவன குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பைகள் 50 கிலோ இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.