சென்னையில் கடந்த ஆண்டு 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும் வாகன திருட்டை கண்காணிப்பதற்காகவும் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை மாநகர போலீசார் இன்று இறுதி செய்கின்றனர். திருடப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி செயின் பறிப்பு, கொள்ளை,கொலை சம்பவங்கள் நடத்தப்படுவதால் இந்த கேமராக்கள் அதை தடுக்க உதவியாக அமையும் என போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே சென்னையில் விரைவில் 200 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.