ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. இதுவரை திமுக, நாம் தமிழர், தேமுதிக, அமமுக மற்றும் ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசு நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.