திருப்பத்தூர் மாவட்டத்தில் ராட்சத பாஜக கொடிக்கம்பம் விழுந்த விபத்து தொடர்பாக பாஜக நிர்வாகி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்பதற்காக புதுப்பேட்டை ஈரோடு கூட்டு ரோட்டில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த 50 அடி உயரம் கொண்ட பாஜக இரும்பு கொடி கம்பம் சாய்ந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த அப்துல் கரீம் என்பவர் மீது கொடிக்கம்பம் விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அப்துல் கரீம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்பத்தூர் நகர பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.