
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் அனிஷா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் ஆம்பலூர் பாவினுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஐந்து வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் நெருங்கிய உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அனிஷாவிற்கு முதலில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தக் குழந்தையை அனிஷா கொன்று தனது வீட்டின் முற்றத்தில் வைத்துள்ளார். பிறகு 8 மாதம் கழித்து அந்த எலும்புக்கூடை எடுத்து பாவினிடம் கொடுத்துள்ளார். அதேபோன்று அனிஷாவுக்கு 2-வது குழந்தை கடந்த 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. அந்த குழந்தையையும் அவர் கொன்றுவிட்டு துணியில் சுற்றி பாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே தகாத உறவில் இருந்ததால் இந்த குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்து கொலை செய்துள்ளனர். அதன் பின் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதால் பாவின் குழந்தையின் எலும்புக்கூடை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு நடந்த சம்பவத்தை குறித்து அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களின் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பாகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.