கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டி உள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 1176 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.