மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்து உள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைகை அணை தண்ணீர் செல்லும் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.