தமிழகத்தில் ஐந்து மாநகராட்சிகளில் உதவி ஆணையர்களை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட் திருச்சி மாவட்டத்திற்கும், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் நாகராஜன் ராஜபாளையத்திற்கும், ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சாரதி வேலூர் மாநகராட்சி உதவி ஆணையராகவும், வேலூர் உதவி ஆணையர் சுப்பையா பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி கோவை மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.