பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினாலும், அவற்றிற்கு சார்ஜ் செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு பல மணி நேரங்கள் ஆகிறது. இந்த சிக்கலை போக்க, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் 5 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேட்டரி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்