தமிழ்நாட்டில் நாளை ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க, ஆர்எஸ்எஸ் கேட்டிருந்த 45 இடங்களிலும் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து நாளை தமிழகம் முழுவதும் RSS அமைப்பினர் ஊர்வலம் நடத்த உள்ளனர். பல காலமாக பேரணி நடத்த அவர்கள் வைக்கும் கோரிக்கையை அரசு நிராகரித்து வந்தது. இந்நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. ஊர்வலத்தில் செய்யக்கூடாத விவகாரங்கள் குறித்த பட்டியலை அனைத்து காவல்நிலையத்திற்கும் DGP அனுப்பியிருக்கிறார். ஊர்வலத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் போலீஸ் அலர்ட்-ஆக இருக்கிறது.