மெட்ரோ ஒப்பந்தத்தை பெற M ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய புகாருக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தளவாடங்கள் வாங்கியதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்றும் 2010 மெட்ரோ பணிகளில் ஒப்பந்தம் வழங்க டெண்டர் விதிகளின் திருத்தத்தால் அரசுக்கு லாபம் தான் கிடைத்தது எனவும் விளக்கமளித்துள்ளது.