திமுக சார்பில் 234 தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு தொகுதி பார்வையாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கான பணியும் திமுக தலைமை கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்களுக்கு சில மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக திமுக தலைமைக்கு வந்து கொண்டிருந்தது.

அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகளுக்கு மாவட்ட செயலாளர்கள் யாராவது உட்பட்டால் ? விசாரணைக்கு பிறகு அவர்கள் நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின்  எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் அனைவரும் ஒற்றுமையாக,  ஒருங்கிணைந்து வேலை பார்க்க வேண்டும்.  அதேபோல வருகின்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நம் கூட்டணியானது வெற்றி பெற வேண்டும். அதற்காக வேலையை நீங்கள் துவங்குங்கள் என்றும் பேசி இருக்கிறார்.

மேலும்  இந்த கூட்டத்தை பொறுத்தவரைக்கும் சில மாவட்ட செயலாளருக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.  இன்று காலை தமிழக முதலவர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.