தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் இருந்து 3 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ தண்டுக்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் செல்வம் உள்பட  4 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.