கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகில் பழங்கூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் ராஜேந்திரன்(55) கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு, 10-க்கும் அதிகமான மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான சினையாக இருந்த பசுமாடு ஒன்று இன்று காலை 8 மணியளவில் கன்றுக்குட்டி ஒன்றை ஈன்று உள்ளது.

அந்த கன்றுக் குட்டிக்கு 4 கால்களும் இல்லாதததை பார்த்து அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு பால் குடிக்க முடியாத கன்றுக் குட்டிக்கு பாட்டில் வாயிலாக பால் கொடுத்து வருகிறார். 4 கால்களும் இன்றி பிறந்த இந்த கன்றுக் குட்டியை பழங்கூர் மற்றும் அதன் அருகாமையிலுள்ள கிராம பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.