தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளத்திற்கு பிறகு நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் அரசு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து சிறப்பு முகாம் நடைபெறும் நிலையில் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.