தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.