
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் திரையரங்குகள் மற்றும் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் என அண்மையில் அரசு அறிவித்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் உருமாறிய கொரோனா வைரஸுக்கு தமிழகத்தில் நான்கு பேர் உயிரிழந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஒவ்வொரு நாளும் துபாய் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகிறது. தமிழகத்தில் இருப்பவர்களுக்கு 90% நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பு வருமா வராதா என பீதியை கிளப்ப வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.