இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜ்நோர் என்ற மாவட்டத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் சிக்கியது. 36 பயணிகளுடன் சென்ற சாலை பேருந்து ஒன்று ஆற்றில் சிக்கிக் கொண்ட நிலையில் பேருந்தில் சிக்கிய பயணிகள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கதறினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர். ஆற்றில் பலத்த நீரோட்டத்தில் பேருந்து அடித்துச் செல்லாமல் இருக்கவும் பேருந்து கவிலாமல் இருப்பதற்கும் ஜேசிபி மூலம் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. துரித நடவடிக்கைக்கு பிறகு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.