வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கான Refund தொகையை செலுத்தத் தொடங்கி விட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. நிதியாண்டு 2022 – 2023 வரையிலான வருமான வரித் தாக்கலினை செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். இந்நிலையில் ஏற்கனவே தாக்கல் செய்தோருக்கு பணம் வரத் தொடங்கியிருக்கிறது. நீங்களும் உடனே உங்களது வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யுங்க. வருமானவரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தற்போது வரை 5.83 கோடி மக்கள் வருமானவரி தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் பல கோடி மக்கள் தாக்கல் செய்யாமலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 31ஐ தாண்டினால் அபராதம் விதிக்கப்படும்.