2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கணித்துள்ளார். NDA கூட்டணி 2024 ஆம் ஆண்டு தனது 25 வது ஆண்டு நிறைவு செய்வதாக சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும் ஒடிசா சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.