நாடு முழுவதும் மக்கள் அனைவரும் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சுகாதார சேவை என்ற பெயரில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பிரம்மாண்ட தூய்மை பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி பிரத்தியேகமாக அழைப்பு விடுத்துள்ளார்.