மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். திமுகவில் வர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் 35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் சூளுரைத்தார்.