உல்லாசக் கப்பலில் பயணித்த 35 வயது அமெரிக்கர் மைக்கேல் வர்ஜில், அதிக மதுவால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராயல் கரீபியன் கப்பல் நிறுவனம் மீது அவரது குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். கப்பல் புறப்பட்ட சில மணி நேரத்தில் வர்ஜில் 33 மதுபானங்களை அருந்தியதாகவும், போதையிலும் அவருக்கு மது தொடர்ந்து வழங்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
போதையில் குழம்பிய அவர், பயணிகளைத் துரத்தியதால் ஊழியர்கள் தலையிட்டுள்ளனர். அப்போது, ஊழியர்கள் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தியதுடன், கேப்டன் உத்தரவின் பேரில் அவருக்கு சக்தி வாய்ந்த மயக்க மருந்தைச் செலுத்தியதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர். மருந்து செலுத்திய சில நிமிடங்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கப்பலிலேயே அவர் உயிரிழந்தார்.
NEW: Man dies on a Royal Caribbean cruise after being served 33 drinks, family accuses cruise staff of injecting him with a sedative.
35-year-old Michael Virgil was seen having a meltdown after getting off the elevator on the wrong floor.
The family says just hours after… pic.twitter.com/pNWcA6VekR
— Collin Rugg (@CollinRugg) December 8, 2025
அதிக மது கொடுப்பதைத் தடுக்கத் தவறியது மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியது ஆகிய அலட்சியங்களுக்காக கப்பல் நிறுவனத்திடம் குடும்பத்தினர் இழப்பீடு கோரியுள்ளனர். இந்தச் சம்பவம், கப்பல் பயணத்தின் பாதுகாப்பு மற்றும் அவசர சிகிச்சை நடைமுறைகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
