IPL தொடரில் இன்று நடந்த 2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பந்து வீச முடிவுசெய்தது. அந்த வகையில்,  முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்களை சேர்த்தது. இதில் பிரப்சிம்ரன் 65 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 103 ரன்களை அடித்து குவித்தார். டெல்லி அணி சார்பாக இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டார்.

அதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி அணியானது களமிறங்கியது. கேப்டன் டேவிட் வார்னர் 27 பந்தில் 54 ரன்களை எடுத்து குவித்தார். கடைசியில் டெல்லி அணி 136 ரன்களை மட்டும் எடுத்தது. இதன் வாயிலாக பஞ்சாப் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. பஞ்சாப் கிங்ஸ் சார்பாக ஹர்பிரீத் பிரார் 4 விக்கெட், நாதன் எல்லீஸ், ராகுல சஹார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த தோல்வியின் வாயிலாக நடப்பு IPL தொடரின் பிளே ஆப் சுற்றிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெளியேறியது.