ரயில்வேயில் 3039 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வயதுவரம்பு 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் நூறு ரூபாய். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதிக்குள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.