கேரள மாநிலத்தில் மூன்று வயது குழந்தையிடம் வட மாநில இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பெரும்பாவூரில் மூன்று வயது பெண் குழந்தையை அசாம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து உள்ளனர்.

இதனால் குழந்தையின் அந்தரங்க உறுப்பு பகுதியில் ரத்தம் வந்துள்ள நிலையில் இதனை அறிந்த குழந்தையின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் அந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.