நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில் நாயகன் மற்றும் பில்லா பாண்டி திரைப்படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி டைரக்டில் உருவாகியுள்ள படம் “குலசாமி”. மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உட்பட பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்ற தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியிருப்பதாவது, இந்த படத்தின் டைரக்டர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும்.

எனினும் அவர் நடிக்க வருவதற்கு முன் 2 படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன். அதுகுறித்து சில விஷயங்களை மட்டும் கூறிக்கொள்கிறேன். அதாவது சுரேஷ் காமாட்சியும் இயக்குனரும் பழைய ஆட்கள் ஆவர். 20 ஆண்டுகளுக்கு முன் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கி கொண்டிருந்தார். அது அவரது முதல் திரைப்படம் ஆகும். எனக்கு உதவி இயக்குனராக முதல் திரைப்படம். படப்பிடிப்பு துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் ஹீரோ அதிக சம்பளம் கேட்கிறார் என மாற்றுகின்றனர்.

பின் கதாநாயகர் யார் என கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று கூறுகின்றனர். நான் இதற்கு ஒத்துப்போகவில்லை. 10 வருடம் ஆனாலும் நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என கூறினேன். அதற்கு சரவணன் இந்த படமே எனக்கு பதினைந்து ஆண்டு கழித்து தான் கிடைத்திருக்கிறது என தெரிவித்தார். அதன்பின் நான் அந்த ஹீரோவுடன் பேசினேன். அவர் 3 லட்சதில் இருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக்கொண்டார். அந்த ஹீரோ வேறு யாருமில்லை நம் ஆர்யாதான். ஒரு வழியாக பேசி கஷ்டபட்டு படத்தை முடித்துவிட்டோம்” என்று பேசினார். குலசாமி படம் வரும் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.