EVM வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேர காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை அதிகாரிகள் இரண்டாவது கட்ட பாதுகாப்பு பணியிலும், காவலர்கள் மூன்றாவது கட்ட பாதுகாப்பு பணியிலும் அமர்த்தப்பட்டுள்ளனர்.