தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் நல்லாம்பாளையம் வாக்குச்சாவடிக்கு இரண்டாவது முறை வாக்களிக்க வந்த நபர் போலீசிடம் சிக்கினார் திருநாவுக்கரசு என்பவர் வாக்கு செலுத்த சென்றபோது வலது கைவிரலில் மை வைக்க கோரி வாக்குவாதம் செய்தார். அப்போது இவர் ஏற்கனவே வாழ்த்து செலுத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து போலீசார் அவரை இழுத்துச் சென்று விசாரணை நடத்தினர்.