தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்து இருக்கிறது. நேற்று 7 மணி வரை 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்தார். ஆனால் நள்ளிரவில் 69.46 சதவீதம் வாக்குகள் தான் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டு அரசியல் கட்சிகளையும் மக்களையும் குழப்பியுள்ளது.