ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கடத்திவரப்பட்டுள்ள 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது லாரியில் இருந்த 285 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர் அதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த கார்த்தி மற்றும் தென்காசியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.