தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டிசம்பர் 3ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 9 ஆகிய தேதிகளில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2582 பணியிடங்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.