திருமணம் செய்து கொள்கிற எண்ணத்தை தான் கைவிட்டு விட்டதாக நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 25 வயதில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது அமையவில்லை. இப்போது எனக்கு 40 வயதாகிறது. இதன் பிறகு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. கடைசிவரை தனிமையான வாழ்க்கைக்கு பழகிக் கொள்ளப் போகிறேன் என்று அவர் கூறியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.