2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மனைவி மகன் உட்பட 6 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர் நேற்று இந்த வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாமியாரின் மனைவி மகன் உட்பட 6 பேருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி நீதிமன்றம் விடுவித்து இருந்தது. 10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.