அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் சேதமடைந்தது. இதனால் தற்காலிகமாக காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த இணைப்பில் வரும் தண்ணீர் அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்றும் கூறி அரியலூர் தா.பழூர் சாலையில் மக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.