இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

ஆர்.வி கல்லூரியில் தொடங்கி வேதாரண்யம் சென்று இந்த விழிப்புணர்வு பயணம் முடிந்தது. இந்த பயணத்தில் 150 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து இரண்டு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.