மதுரை மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பெரிய கட்டளை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, தங்கப்பாண்டி, செல்லதுரை என்பது தெரியவந்தது.

இவர்கள் மது பாட்டில்களை கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்லத்துரை உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.