
ஈரோடு மாவட்டத்திலுள்ள தேவம்பாளையம் பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சந்தோஷ்(22) என்பவரும் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று மாலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புஞ்சைபுளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பாறைபுதூர் அருகே சென்ற போது கௌதம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கௌதம், சந்தோஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.