திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி மகாவீர் தெருவில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி விபத்தில் சிக்கி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார் அவரது இறுதி சடங்கில் உறவினர்களான சென்னையை சேர்ந்த வேல்முருகன், அவரது மனைவி நீலா, மகள் மேகலா, மகன் பிரணவ், நீலாவின் தங்கை கௌதமி, அவரது மகன்கள் ஹரிகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துவிட்டு மீண்டும் காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நலையில் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலை சாலவேடு கிராமம் அருகே சென்றபோது சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் நீலாவும் ஹரிகிருஷ்ணனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்த படுகாயமடைந்த வேல்முருகன், மேகலா உள்பட 5 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.