திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது விடுமுறையை முன்னிட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

அப்படி இருக்க பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடத்தை தேர்வு செய்து ஒதுக்கவில்லை. இதனால் சாலையோரம் வாகனம் நிறுத்தப்படுகிறது. கோவிலை சுற்றி இருக்கும் கோவில் கோவில் மாடவீதி, சன்னதி தெரு, சின்ன கடைவீதி, காந்திநகர் புறவழிச்சாலை உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் பக்தர்களின் வாகனங்கள் நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.