ஐபிஎல் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணியில் விராட் கோலி 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், வில் ஜாக்ஸ் 41 பந்தில் 10 சிக்ஸர் 5 பவுண்ட்ரியுடன் சதம் அடித்து அசத்தினார்‌.

இறுதியில் பெங்களூர் அணி 16 ஓவரில் 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியை தொடர்ந்து விராட் கோலி தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் இவர் 10 போட்டிகளில் விளையாடி 501 ரன்கள் எடுத்துள்ளார்.