கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி பகுதியில் சட்டவிராதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எல்.என்.ஜி கார்டன் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சாந்தன் குமார், அங்கீத் குமார் ஆகிய இருவரும் சட்ட விரோதமாக கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.