ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தாகவுண்டனூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார் இவர் விவசாய நிலத்தில் கற்களை நிறுத்தி கம்பி வேலி அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் இங்கு கம்பி வேலி அமைக்க கூடாது என மாதேஷிடம் கூறினார்கள். இதனால் ஏற்பட்ட தகராறில் ஐந்து பேரும் இணைந்து மாதேஷின் தாய் மற்றும் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

மேலும் மாதேஷிற்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சின்னசாமி, பெருமாள் ஆகியோரை கைது செய்தனர் .மேலும் தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையே காயமடைந்த மாதேஷின் தாயும், மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.