2 பெண்களுடன் ஒரு ஆண் செய்த ஆபத்தான பைக் ஸ்டண்ட் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து காவல்துறை அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வைரல் வீடியோவில் ஒரு பெண்ணை தனக்கு முன்னாலும், மற்றொரு பெண்ணை தனக்கு பின்னாலும் அமரவைத்துக் கொண்டு வாலிபர் ஒருவர் பைக்கில் வீலிங் செய்கிறார்.

அந்நபர் பைக்கின் முன் சக்கரங்களை சாலையில் இருந்து தூக்கிக்கொண்டு பல மீட்டர்கள் செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இரண்டு பெண்களும் தடுமாறி விழாமல் இருப்பதற்கு அந்நபரை இருக்கமாக கட்டுப்பிடித்திருந்தனர். இதனிடையே 3 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. இந்த வீடியோவுக்கு டுவிட்டரில் பதிலளித்த மும்பை போக்குவரத்து காவல்துறையினர் “இதுபற்றி பிகேசி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினர்.