திரை பிரபலங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் தேவரகொண்டா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் ராஷ்மிகாவை நான் திருமணம் செய்ய இருப்பதாக பரவும் தகவல்கள் உண்மை இல்லை. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஊடகங்கள் நினைக்கிறார்கள் போல. ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியை கேட்கிறேன். இது போன்ற வதந்திகள் மூலமாக அவர்கள் என்னை திருமணம் செய்வதற்கு வற்புறுத்துகின்றனர் எனக் கூறியுள்ளார்.