தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவர் நடிகை ராஷ்மிகா . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வாரிசு.  இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில்  அனிமல் படத்தின் படப்பிடிப்பின் போது ரன்பீர் கபூரின் கன்னத்தில் அறைந்துவிட்டேன் என நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

டிருப்தி டிம்ரியுடன் ரன்பீர் தூங்கும் காட்சியை படமாக்கியபோது, அவரை உண்மையாகவே அறைந்துவிட்டதாக கூறிய ரஷ்மிகா, பிறகு அந்த சம்பவத்தை நினைத்து அழுதேன் என்றார். மேலும், நான் நடிகையாக இருப்பதன் உச்சத்தை அப்போதுதான் உணர்ந்தேன் எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்