கேப்டன் விஜயகாந்த் இறப்பிற்கு வராதவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மட்டுமல்லாது பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பற்கேற்றவர்களுக்கு மிக்க நன்றி, அதில் பல்வேறு காரணங்களால் பங்கேற்க முடியாவர்களுக்கும் நன்றி. உங்கள் எண்ணமும் கேப்டனிடமே இருந்திருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.