உதகை மற்றும் கொடைக்கானல் செல்வதற்கு மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பலரும் கொடைக்கானல் செல்வதை தவிர்த்து வருவதாக கூறப்படும் நிலையில் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் மக்களிடையே இ- பாஸ் அச்சம் தேவையில்லை எனவும் வீட்டிலிருந்து உதகைக்கு புறப்படும் போது கூட தங்களுடைய செல்போனில் இ- பாஸ் பதிவு செய்தால் இரண்டு நிமிடத்தில் பாஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.