ராஜஸ்தானில் விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரத்தன்கரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஹசாரி சிங் என்ற 19 வயது இளம்பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோனோகிராம் செய்து அதில் ஒரு வித்தியாசமான குழந்தை இருப்பதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு அந்த இளம் பெண்ணுக்கு இரண்டு இதயங்கள்,நான்கு கைகள் மற்றும் நான்கு கால்கள் கொண்ட குழந்தை பிறந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பிறந்த குழந்தை 20 நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அந்த இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.