சினிமா பத்திரிகையாளர் மற்றும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் முந்தானை முடிச்சு, தர்மதுரை, ஜெய்ஹிந்த், தெனாலி, வில்லன், பகவதி உட்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இப்போது இவர் சினிமா பற்றியும் திரைத்துறை நடிகர், நடிகைகள் குறித்தும் பல விஷயங்களை சமூகவலைத்தளத்தின் மூலம் பகிர்ந்து வருகிறார். இதனால் அவர் மீது திரைப் பிரபலங்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் பற்றி இயக்குனர் வெங்கட் பிரபுவின் சமூகவலைதளப்பதிவு வைரலாகி வருகிறது. அதாவது “2 ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் இசைவெல்லம் பயில்வான் ரங்கநாதன் சாரின் பாடல்கள், பின்னணி இசைக்காக வாழ்த்துகள். தங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். உங்களது பணியின் பெரிய ரசிகர். மேலும் விபரங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு ஜி.வி.பிரகாஷ் பதிவை பார்க்கவும்” என குறிப்பிட்டு உள்ளார். இப்பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.